இலங்கை

கைவிடப்பட்ட மன்னார் மருத்துவமனை போராட்டம்!

Published

on

கைவிடப்பட்ட மன்னார் மருத்துவமனை போராட்டம்!

மன்னார் மாவட்ட மருத்துவமனை மருத்துவர்களால் முன்னெடுக்கப்பட விருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

மருத்துவமனையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் , மன்னார் மருத்துவமனையில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படாத சூழலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர். 

Advertisement

அந்தநிலையில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால் , மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் , வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்து , வீடிழந்து , உதவிகள் இன்றி தவித்து நிற்கும் மக்களை வஞ்சிக்கும் எண்ணம் இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தாற்காலிகமா இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

அத்துடன் , ஒரு சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் மேல்மட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version