இலங்கை

நானாட்டானில் கைவரிசை காட்டிய ஜோதிட பெண்

Published

on

நானாட்டானில் கைவரிசை காட்டிய ஜோதிட பெண்

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளார்.

இத் திருட்டுச் சம்பவமானத நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறி பணத்தை பெற்றுள்ளதுடன் குடிப்பதற்கு நீர் கேட்டுள்ளனர்.

கொடுக்கப்பட்ட நீரை குடித்துவிட்டு சாத்திரம் பார்ப்பதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு சாத்திரம் பார்த்துள்ளார்.

Advertisement

இதன்போது குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசி அப்பெண் அணிந்திருந்த சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.

இவ்வாறாக மாலை 5 மணிக்கு பின்னரே அவர்களுக்கு சுய நினைவு திரும்பியதுடன், சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சந்தேகிக்கப்படும் பெண் சிறுவன் ஒருவருடன் வீதியில் சென்ற CCTV வீடியோ காட்சி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version