இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!

Published

on

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!

பேஸ்புக் தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தைப் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் கஜந்தரூபன் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் மாவட்ட உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினராலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றும், புதிய நாடாளுமன்றம் அது தொடர்பில் தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி அநுர உள்ளிட்ட பல தரப்பினரும் தொடர்ச்சியாகக் கூறிவந்தனர். எனினும், என்ன காரணத்துக்காக கடந்த அரசாங்கங்களால் தமிழர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதோ அதேநிலைமை தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version