இலங்கை
பிரதமர் ஹரிணி மன்னார் வருகை!
பிரதமர் ஹரிணி மன்னார் வருகை!
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று காலை மன்னாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதன் போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் , வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்களாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் நகரில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)