விளையாட்டு

மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை

Published

on

மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.

Advertisement

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சமரி அத்தப்பத்து 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

Advertisement

இந்தநிலையில் 116 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணியின் சார்பில் ஜோர்ஜியா ப்ளிம்மர் 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 இதற்கமைய இலங்கை மகளிர் அணி எவ்வித வெற்றிகளையும் பதிவுசெய்யாத நிலையில் மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version