இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு வீதி நாடகம்!

Published

on

மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு வீதி நாடகம்!

தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது

அதன்படி மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மகாலட்சுமி குரு சாந்தனின் ஒழுங்கமைப்பில் மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் குறித்த வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

Advertisement

தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிக்கும் முகமாகவும் அரசியலில் பெண்களின் அங்கத்துவத்தை ஸ்திர படுத்துவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகம் நேற்று மன்னார் பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது

இதில் மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நாடக காட்சிப்படுத்தலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், அரச உத்தியோகத்தர்கள், மாதர் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version