இலங்கை

மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Published

on

மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை!

மன்னார் பொது மருத்துவமனையில் உயிரிழந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று மாலை மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு முன் அமைதியாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவமனைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள் ,டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

மருத்துவமனையின்  கண்காணிப்புக் கமராக்கள் மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை சேகரித்து அதன் ஊடாக அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை தூண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்யயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version