இலங்கை

மன்னார் மருத்துவமனையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள்

Published

on

மன்னார் மருத்துவமனையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள்

அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய எலும்பியல் துறை சத்திர சிகிச்சை (ஆண், பெண் இருபாலாருக்குமான) விடுதிகள் நேற்று (12)  திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தின் மிக நீண்ட கால தேவையாகவிருந்த எலும்பு முறிவு மற்றும் சிகிச்சைக்கான விசேட விடுதிகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் ஹனிபா திறந்து வைத்தார்.

Advertisement

இந்நிகழ்வில் எலும்பியல் சத்திர சிகிச்சை விசேட நிபுணர்கள் டாக்டர் பி. திலீபன், டாக்டர் ஆர்.எம்.எம். தீபன்,ஏனைய விசேட மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version