இலங்கை

முச்சக்கரவண்டி மற்றும் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Published

on

முச்சக்கரவண்டி மற்றும் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும், தனியார் பேருந்து கட்டணத்திலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேவேளை, முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு, பெற்றோலின் விலையில் முன்னெடுக்கப்பட்ட திருத்தம் போதாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version