இலங்கை

யானைத் தாக்குதலில் கடற்படை அதிகாரி சாவு!

Published

on

யானைத் தாக்குதலில் கடற்படை அதிகாரி சாவு!

பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரான லெப்டினன் தர அதிகாரியொருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொழும்புக்கு சென்று மீண்டும் முகாமிற்கு திரும்பிய சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. யானைத் தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான கடற்படை அதிகாரி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் பூனாவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version