இலங்கை

யாழில் சர்வதேச சதுரங்க போட்டி!

Published

on

யாழில் சர்வதேச சதுரங்க போட்டி!

இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் ” யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 ” கார்த்திகை 30 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 4 ஆம் திகதி வரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பளஸ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் சுமார் 750 க்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கு பற்றுகின்றார்கள். இவர்கள், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

இப்போட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதோடு இது 150 மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற இரண்டாவது சர்வதேச சதுரங்க போட்டி சென்ற வருடம் முதலாவது போட்டி மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

இப் போட்டியானது எமது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்கள் சர்வதேச தரத்தை அதிகரித்துக் கொள்ள உதவுவதோடு பல சதுரங்க வீரர்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கின்றது.

Advertisement

போட்டியின் இன்றைய தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக ஆளுநர் நா.வேதநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனர் கலாநிதி ஆறு திருமுருகன் கலந்து கொண்டார்.

இப்போட்டிக்கு பிரதான அனுசரணையாளர்களாக லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனமும் மற்றும் வெளிநாடு, உள்நாட்டில் வசிக்கின்ற நலன் விரும்பிகளின் நிதி பங்களிப்புடன் சிறப்பாக நடைபெறுகின்றது.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version