இலங்கை
இரண்டு அஞ்சல் ரயில்களும் இரத்து!
இரண்டு அஞ்சல் ரயில்களும் இரத்து!
மலையக ரயில் தண்டவாளங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், புதன்கிழமை (27) இயக்கப்படவிருந்த கொழும்பு – கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு அஞ்சல் ரயில்களும் நேற்றும் (26) ரத்து செய்யப்பட்டன.
இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையான புகையிரத பாதையில் இயங்கும் புகையிரதம் இரண்டாவது நாளாக இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.