இலங்கை

கடுமழை காரணமாக சரிந்து விழுந்த மண் மேடுகள் தடைப்பட்ட புகையிரத சேவைகள் !

Published

on

கடுமழை காரணமாக சரிந்து விழுந்த மண் மேடுகள் தடைப்பட்ட புகையிரத சேவைகள் !

மலையக ரயில் மார்க்கத்தின் பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிக்கு இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை –  பண்டாரவளைக்கிடையிலான ரயில் மார்க்கத்தில் மண்மேடுகளும் கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்மேடு, மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை – பண்டாரவளை வீதியின் உடுவர கிரிமண்டலத்திற்கு அருகில், ஹப்புத்தளை பெரகல வீதி, பதுளை – பசறை வீதி 03 ஆம் மைல்கல், பதுளை – ஸ்பிரிங்வெலி வீதி ,பதுளை – பசறை வீதியின் 7 ஆம் மைல்கல் மற்றும் பிபில – லுணுகல வீதியில் அரவாகும்புர ஆகிய வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும், வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version