இலங்கை

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம்!

Published

on

Loading

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம்!

கல்வி அமைச்சின் விசேட சுற்று நிருபத்திற்கு அமைவாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம் 2024.11.22ம் திகதி பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிஷாத்  தலைமையில்  இடம்பெற்றது. 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக  தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழிகள் பிரிவுக்குப் பொறுப்பான முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம்.ஜலால்டீன்  கலந்து சிறப்பித்தார்.

Advertisement

இதன்போது அரபு மொழியின் தொன்மை அதன் வளர்ச்சி பற்றிய விளக்கங்களும், அரபு மொழிப் பேச்சுக்களும், கசீதாக்களும் மற்றும் கவிதைகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகளும் மாணவர்களால்  நிகழ்த்தப்பட்டன. 

இந் நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டதோடு ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பேராசிரியர் எம்.எஸ்.எம்.ஜலால்டீன் அவர்களினால் எழுதப்பட்ட ஒரு தொகுதி நூல்கள் பாடசாலை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version