இலங்கை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் சாவு- திருகோணமலையில் சம்பவம்!

Published

on

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் சாவு- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் 63வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், தனது கணவருக்கு சொந்தமான மருத்துவமனையின் 3ஆவது மாடியில் வசித்து வந்துள்ள நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இன்று காலை குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக உயிரிழந்த பெண்ணின் கணவரது சகோதரனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இதேவேளை தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version