இலங்கை

கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் பெண்  கைது

Published

on

கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் பெண்  கைது

 

திருகோணமலை தம்பலகாமம் பிரிவுக்குட்பட்ட 99ஆம் கொலனி பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (26) போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இவர் ஹைரியா நகர் புல்மோட்டை – 1 என்ற பகுதியில் வசிக்கும் 44 வயது பெண் ஆவார். 

விற்பனை செய்வதற்காக 500 கிராம் கேரள கஞ்சாவை தம் வசம் வைத்திருந்தபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version