இலங்கை

கோர விபத்தில் பெண் உயிரிழப்பு

Published

on

கோர விபத்தில் பெண் உயிரிழப்பு

கொழும்பு – பதுளை வீதியில் ஹங்வெல்ல நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

Advertisement

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதி பின்னர் முச்சக்கரவண்டி மற்றும் மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்தில் முச்சக்கரவண்டி மற்றும் பஸ் ஆகியவற்றிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version