இலங்கை

சட்டவிரோத வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

Published

on

சட்டவிரோத வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம்  மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில்  எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு   இவ்வாறு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கும் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பணிமனைக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட நிலையில், பொதி செய்யப்பட்ட சுமார் 32 ஆயிரம் வாக்குச்சீட்டுக்களுடன் இரு சந்தேகநபர்கள்  நேற்று (7) மாலை கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மாதிரி வாக்ச்குசீட்டில் ஒரு முஸ்லீம் தேசிய கட்சி ஒன்றின் சின்னத்திற்கும்  இலக்கம் இரண்டிற்கும்  புள்ளடி  இடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.  

தற்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன்,  மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version