இலங்கை

சிறுமியின் உயிரை காவு கொண்ட மகிழுந்து!

Published

on

சிறுமியின் உயிரை காவு கொண்ட மகிழுந்து!

(தமிழினி)

திருகோணமலை ஈச்சிலம்பற்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisement

விபத்தில் ஆறு வயதுடைய நிதர்சன் ஆதித்யா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதோடு, அவரது சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
யாழ்ப்பாணம்- பருத்தித்துறையை சேர்ந்த குடும்பமொன்று திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ஈச்சிலம்பற்றில் மகிழுந்து வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில் கணவன் – மனைவி அகிய இருவரும் காயங்களின்றி தப்பித்த நிலையில் அவர்களது மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 04 வயது மகன்  படுகாயமடைந்த நிலையில்  மூதூர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version