இலங்கை

சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published

on

சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (08) மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை மற்றும் ஹாலி எல, கண்டி மாவட்டத்தில் பததும்பர மற்றும் தும்பனை, கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, தெஹியோவிட்ட, கலிகமுவ, ரம்புக்கன, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல மற்றும் கேகாலை, குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, குருவிட்ட, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version