இலங்கை
திருகோணமலையில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
திருகோணமலையில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
திருகோணமலையில் உள்ள வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவமானது இன்றையதினம் (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது வீட்டின் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. முன் பகையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.