இலங்கை

துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் பலி

Published

on

துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் பலி

திருகோணமலைஇ ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயிலடியில் இன்று  (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காவந்திஸ்ஸ புரஇ ஸ்ரீ புரவைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது மூன்று முறை டி 56 ரக துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணையை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருவதகவும் ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். (ஞ)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version