இலங்கை
நெல் வயல்களில் நோய்த்தாக்கம் அதிகரிப்பு- விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயதாசன் தெரிவிப்பு!
நெல் வயல்களில் நோய்த்தாக்கம் அதிகரிப்பு- விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயதாசன் தெரிவிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் வயல்களில் கபிலநிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி நோய்த்தாக்கம் அதிகரிப்பு கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிளிநொச்சி பிரதி விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயதாசன் தெரிவிப்பு.
இன்று கிளிநொச்சியில் விவசாய திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
கடந்த காலங்களிலும் குறித்த நோய்யின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதுடன் கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய காலநிலையால் குறித்த நோய்யின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
புளியம்பொக்கணை, பளை, முரசுமோட்டை, பெரிய பரந்தன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. விவசாயிகள் விவசாய போதனாசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் சிறுதானியம், மரக்கறி செய்கைகளின் அழிவு விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். (ப)