இலங்கை

பாழடைந்த கிணற்றில் யுவதியின் சடலம் மீட்பு…! 

Published

on

பாழடைந்த கிணற்றில் யுவதியின் சடலம் மீட்பு…! 

 

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாலடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக அகழ்வு செய்வதற்காக மூதூர் நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் குறித்த கிணறானது பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வு செய்யப்பட்ட  போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சேருநுவர – தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நடேஸ்குமார் வினோதினி என தெரியவருகின்றது.

மீட்கப்பட்ட சடலமானது சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. அத்தோடு யுவதியின் கைப் பையும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதி காதலனினால் கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் 25 வயதான காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version