இலங்கை

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு !

Published

on

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், நேற்றையதினம்  மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய விவசாயியே உயிரிழந்தவராவார் . 

 சம்பவதினத்தன்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, 

அந்த பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் 

Advertisement

உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.[ ஒ ]  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version