இலங்கை
மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் சாவு!
மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் சாவு!
களுத்துறை பிரதேசத்தில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை , வெனிவெல்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜயகொடி ஆராச்சிலாகே சுகத் என்ற நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.