இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்!

Published

on

மின்சார கட்டணம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கும் மேலாக குறைக்கும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 வீதத்திற்கும் அதிகமான மின் கட்டணத்தை குறைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (ச)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version