இலங்கை

முதலை இழுத்துச்சென்றவரின் சடலம் மீட்பு

Published

on

முதலை இழுத்துச்சென்றவரின் சடலம் மீட்பு

  அம்பாறை, பொத்துவில், முதலைப் பாறை பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடில் நிலவிய சீற்றற்ற் காலநிலையின்போது கடந்த 28ஆம் திகதி முதலை குறித்த நபரை இழுத்து சென்றது.

Advertisement

சம்பவத்தில் உயிரிழந்தவர் பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்தவர் ஆவார்.

கடந்த வாரம் எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டு ஆற்றை கடந்து சென்ற நபரை முதலை இழுத்துச் சென்றது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காணாமல்போனவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்த நிலையில், கடற்படையினரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version