இலங்கை

வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

Published

on

Loading

வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறி ஒன்றை  நேற்று (13)  சோதனையிட்ட போது கைக்குண்டு டி-56 தோட்டா, டி கடக் துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துளள்ளனர். .

இதையடுத்து லொறியின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

லொறியில் ரி-56 துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையத்தை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய  பொலிஸார் உடனடியாக செயற்பட்டு மேற்கொண்ட விசாரணைகளின் போது  வெடிகுண்டுகள், மற்றும் லாரியின் மேல் பகுதியில் மெழுகு பையில் சுற்றப்பட்ட தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version