இலங்கை

வீதியைவிட்டு விலகிய கார்; மூவருக்கு நேர்ந்த கதி

Published

on

வீதியைவிட்டு விலகிய கார்; மூவருக்கு நேர்ந்த கதி

 மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதான வீதியில் ராஹூல சந்திக்கு அருகில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதுடன், காரில் பயணித்த மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

கார் அக்குரஸ்ஸவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததால், சாரதியால் காரைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்தில் வீதியின் ஓரத்தில் இருந்த மின்கம்பமும் சேதமடைந்துள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version