இந்தியா
அரச பேருதுடன் கார் மோதி விபத்து- மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சாவு!
அரச பேருதுடன் கார் மோதி விபத்து- மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சாவு!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்றிரவு கொச்சி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த வேளை எதிரில் வந்த அரச பேருதுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் பயணித்த மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடம் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றவேளை செல்லும் வழியிலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (ப)