இலங்கை

இரவு கார் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… நால்வர் வைத்தியசாலையில்!

Published

on

இரவு கார் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… நால்வர் வைத்தியசாலையில்!

காலியில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவம் இன்றிரவு (03-12-2024) காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

Advertisement

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version