இலங்கை

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Published

on

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Advertisement

குறித்த மீன்பிடி படகு சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.

அவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த இலங்கை கடற்படையினர் 18 இந்திய மீனவர்களுடன் 01 இந்திய மீன்பிடி படகு கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைதான இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு இலங்கை கடலோர காவல்படை வடக்கு பிராந்திய பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version