இலங்கை

கனடாவில் 2ம் திருமணம்… யாழ்ப்பாணம் வந்து தாயை கொடூரமாக தாக்கிய குடும்பப் பெண்! அதிர்ச்சி பின்னணி

Published

on

கனடாவில் 2ம் திருமணம்… யாழ்ப்பாணம் வந்து தாயை கொடூரமாக தாக்கிய குடும்பப் பெண்! அதிர்ச்சி பின்னணி

கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வரும் 43 குடும்பப் பெண் ஒருவர் யாழிற்கு வந்து தனது 69 வயதான தாயாரை தும்புத்தடி மற்றும் செருப்பால் கடுமையான தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக கனடா வாழ் குடும்பப் பெண்ணின் சகோதரி பொலிஸாரிம் முறைப்பாடு அளித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது கணவனையும் 16 வயது மற்றும் 13 வயதான மகன்களையும் கைவிட்டு விட்டு கனடாவில் 35 வயதான இன்னொரு குடும்பஸ்தருடன் குறித்த குடும்பப் பெண் தற்போது வாழ்ந்து வருகின்றார்.

இச்செயலால் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த பெண்ணின் தாயார் கடும் கோபத்துடன் இருந்துள்ளார்.

Advertisement

கனடாவில் கணவனை கைவிட்டு இன்னொருவருடன் வாழ்ந்து வரும் தனது மகளுக்கு பாடம் கற்பிக்க தாயார் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணுக்கு கொடுக்க நினைத்த பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை யாழ்ப்பாணத்தில் தன்னுடன் வாழும் தனது இரண்டாவது மகளுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள கடைத்தொகுதியுடன் கூடிய 3 பரப்பு காணி மற்றும் வலிவடக்குப் பகுதியில் உள்ள 30 பரப்புக் காணி என்பவற்றையே தனது இரண்டாவது மகளுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

Advertisement

மேலும், யாழ் நகரப்பகுதியில் உள்ள காணியில் கட்டப்பட்ட கடைத் தொகுதி கனடாவிலிருந்து குடும்பப் பெண் அனுப்பிய காசிலேயே கட்டப்பட்டதாக தெரியவருகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version