இலங்கை

இரு நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்; ஒருவர் பலி

Published

on

இரு நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்; ஒருவர் பலி

  களுத்துறை, மொரந்துடுவ தெல்கட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த உதயங்க சில்வா என்ற 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Advertisement

உயிரிழந்த இளைஞன் தனது 17 வயது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் இளைஞனின் நண்பன் படுகாயமடைந்து களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 25 வயதுடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version