விளையாட்டு

ஐந்தாவது இந்தியர்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா!

Published

on

ஐந்தாவது இந்தியர்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா!

Advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, கடந்த ஆகஸ்டில் ஐசிசி தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். வேறு யாரும் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்காத நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆகஸ்டில் தேர்வு செய்யப்பட்டாலும், தலைவராக இருந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் இறுதியுடன் நிறைவுற்றது.

இதனைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா, தனது பொறுப்புகளை டிசம்பர் ஒன்றாம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக்கொண்டார்.

36 வயதிலேயே ஐசிசி தலைவர் பதவியைப் பெற்ற இளம் நபர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது ஐசிசியின் தலைவராகியுள்ளார்.

Advertisement

ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், சஷாங்க் மனோகர், என்.சீனிவாசன் வரிசையில் ஐசிசி தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா பதவியேற்றுக் கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version