இந்தியா

“ஒன்னுமே இல்ல எல்லாம் போச்சு – இதுக்கு மேல நாங்க எப்படி வீடு கட்ட முடியும்” – கோர முகத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்…

Published

on

“ஒன்னுமே இல்ல எல்லாம் போச்சு – இதுக்கு மேல நாங்க எப்படி வீடு கட்ட முடியும்” – கோர முகத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதி 

Advertisement

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் மழை வெள்ளம் காரணத்தால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். இது போன்ற வெள்ளத்தை நாங்கள் பார்த்ததே இல்லை, வீடு எல்லாம் போயிடுச்சு, குடிக்க தண்ணி சாப்பாடு எதுவுமே இல்லை.நாங்க எல்லாரும் கூலி வேலை செய்றவங்க. இதுக்கு அப்புறம் நாங்க எப்படி ஒரு வீடு கட்ட முடியும், எல்லாமே போயிடுச்சு என கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்கும் அரகண்டநல்லூர் பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர், மணம்பூண்டி, தென்பெண்ணை ஆறு, மற்றும் துரிஞ்சல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ளம்,ஊருக்குள் புகுந்ததால் சுமார் 2000 குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

மூன்று தினங்களாக கடும் வெள்ளப்பெருக்கின் அவதிப்பட்ட மக்கள் தற்பொழுது மழைநீர் மெல்ல மெல்ல வடிய தொடங்கி, இருந்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை.  மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக உணவுகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வெள்ளத்தால் சூழ்ந்த வீடுகள், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்துமே வெள்ளத்தில் அடித்து சென்றுள்ளதால், பொதுமக்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது பல்வேறு இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.  அதாவது விழுப்புரம் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் முற்றிலுமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது அரகண்டநல்லூர் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சரி செய்து, தற்காலிக போக்குவரத்து வசதி செய்துள்ளனர். இந்நிலையில் வீடு, அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இல்லாமல் உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கடும் வேதனையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்த பாதிப்புகளை சரி செய்து இயல்பு வாழ்க்கைக்கு எங்களால் திரும்ப முடியுமா? என்று பயமாக இருப்பதாகவும், கூலி வேலை செய்யும் நாங்கள் இதற்கு பிறகு எப்படி ஒரு வீடு கட்ட முடியும், குழந்தைகளை வைத்து எங்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று நினைத்தாலே நெஞ்செல்லாம் வலிக்கிறது என கண்ணீர் வெள்ளத்தில் பொதுமக்கள் தங்களுடைய வேதனையை தெரிவிக்கின்றனர். மேலும், இதுவரை யாரும் சரியான முறையில் வந்து விசாரிக்கவில்லை எனவும் தங்களுக்கு நிவாரண பொருட்கள் எதுவும் வழங்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version