இலங்கை

சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று  மாலை ஆரம்பம்!

Published

on

சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று  மாலை ஆரம்பம்!

நாட்டில்  நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று  மாலை 05.30 மணிமுதல் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் காலை 9.30 மணி ஆரம்பமானதுடன் அவ்விவாதம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 5 மணிக்கு இடம்பெறும் எனவும் வாக்கெடுப்பு முடிவடைந்ததும் மாலை  5.30 மணிக்கு எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை இரவு 9.30 மணிவரை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version