உலகம்

பசியால் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்கு பதில் மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல்

Published

on

பசியால் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்கு பதில் மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல்

 

Advertisement

இஸ்ரேலின் போர் முற்றுகையால் பாலஸ்தீனத்துக்குள் அத்தியாவசியப் பொருள்கள் நுழைவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காஸாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 18 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பசியால் வாடிவருவதாக ஐ.நா கூறி இருந்தது.

இதேபோல, நார்வேவைச் சேர்ந்த அகதிகள் கவுன்சில், காஸாவுக்கு அனுப்பப்படும் 83 சதவீத உதவிகளைத் தடுத்துவருவதால், அவர்கள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அனுப்பிய உணவுப் பொருளில் மணல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Israel swaps food aid entering Gaza with bags of sand

Advertisement

Food entering the besieged Gaza Strip was found to contain sand rather than the much needed aid starving Palestinians need. The Palestinian enclave faces famine caused by Israel’s blockade and genocidal war on the territory.… pic.twitter.com/y1XHl7h4Dv

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அத்தியாவசிய பொருளான சர்க்கரை பைகளில் வெறும் மணல் நிரப்பப்பட்டிருந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்களும், அண்டை நாட்டு மக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

Advertisement

அண்மையில் உணவு உரிமைக்கான ஐ.நா.வின் சிறப்பு ஆய்வாளர் மைக்கேல் ஃபக்ரி ஐ.நா அவையில் சமார்பித்த அறிக்கையில், உணவுப் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார நிலை காரணமாகவும், இஸ்ரேலிய இராணுவத்தாலும், பாலஸ்தீனர்களின் உயிருக்கு  அச்சுறுத்தல்கள் இருப்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version