இலங்கை

மின் திட்டங்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிப்பு

Published

on

மின் திட்டங்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் சுமார் 40 செயற்திட்டங்கள் ஆராயப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அது தொடர்பான அறிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சில பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உதயங்க ஹேமபால மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய மின்சார சட்டத்தின் பிரகாரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் இரத்து செய்யப்படும் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version