இலங்கை

ஹிருணிகாவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

Published

on

ஹிருணிகாவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று (04) உத்தரவிட்டது.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையை மீளப்பெறுவதாகவும்,

Advertisement

எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லையெனவும் ஹிருணிக்கா தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதியரசர்கள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version