இந்தியா

School Leave : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 05) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published

on

School Leave : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 05) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வங்கக் கடலில் உருவாகிய ‘ஃபெஞ்சல்’ புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பொழிந்தது. இதன் காரணமாக மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. சில இடங்களில் ஏரியும் ஆறும் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

Advertisement

வெள்ளப்பாதிப்பைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பகுதியில் அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு தரப்பில், அதி கனமழை காரணமாக கடும் மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (டிசம்பர் 5ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அதேசமயம், கடலூரில் நாளை (டிச. 5-ம் தேதி) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதேபோல் புதுச்சேரியில், முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளை தவிர்த்து மற்ற அனைத்து பள்ளி, கல்லூரிகளும் நாளை (டிச. 5-ம் தேதி) வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version