இலங்கை

அரசியல் கைதிகள் தொடர்பில் உறுதிமொழி வழங்கிய நீதி அமைச்சர்!

Published

on

அரசியல் கைதிகள் தொடர்பில் உறுதிமொழி வழங்கிய நீதி அமைச்சர்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (04-12-2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியபோதே, அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நீதி அமைச்சர் வழங்கியுள்ளார்.

Advertisement

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை பதவியேற்று ஒரு மாத காலப்பகுதிதான் ஆகின்றது. இருந்தாலும் உரிய சட்டத்தரப்புகளுடன் கலந்துரையாடி, கூடிய விரைவில் அரசியல் கைதிகள், சாட்சிகளின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

Advertisement

மேலும், ஊழல்கள், மோசடிகள் தொடர்பிலும், ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாகவும் நிச்சயம் நடவடிக்கைகள் இடம்பெறும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version