இலங்கை
அர்ச்சுனாவின் செயற்பாட்டை நாடாளுமன்றில் வரவேற்ற அநுர அரசு
அர்ச்சுனாவின் செயற்பாட்டை நாடாளுமன்றில் வரவேற்ற அநுர அரசு
கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வரவேற்றுள்ளார்.
நாடாளுமன்ற இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், சீரற்ற காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததால் பாரியளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.