இந்தியா
தெலங்கானாவின் முலுகுவில் 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
தெலங்கானாவின் முலுகுவில் 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று காலை 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 7:27 மணியளவில் நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் நிலநடுக்கத்தினால்,உயிர்சேதம் மற்றும் பாரியளவிளான சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக, தெலுங்கானா பல நில அதிர்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் எனவே இந்த அளவு நிலநடுக்கங்கள் அசாதாரணமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)