இலங்கை

புகையிலைக் கொள்வனவால் 5 கோடிக்கு மேல் மோசடி- பிரதான சந்தேகநபர் கைது!

Published

on

புகையிலைக் கொள்வனவால் 5 கோடிக்கு மேல் மோசடி- பிரதான சந்தேகநபர் கைது!

ஊர்காவற்றுறையைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அந்நபர்  தலைமறைவாக இருந்த போது வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேகநபரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version