இலங்கை

லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

Published

on

லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

  லெபனான் – இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நேற்று புதன்கிழமை (04) மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான ஈ.கே – 648 மூலம் நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Advertisement

அவர்களில் 05 பிள்ளைகளும் 03 பெண்களும் 19 ஆண்களும் காணப்படுகின்றனர்.

அதேவேளை இதுவரை லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த சுமார் 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து அவர்களை நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.   

Advertisement

           

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version