இலங்கை
2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று சமர்ப்பிப்பு!
2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று சமர்ப்பிப்பு!
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றதுடன் அது நாளையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு முதல் 4 மாதங்களுக்கும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை பராமரிக்க தேவையான நிதி இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஒதுக்கப்படவுள்ளது.
இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, அண்மைய அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ப)