இந்தியா

School Leave | நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Published

on

School Leave | நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

Advertisement

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ வரை கனமழை கொட்டியது. இதற்கு அடுத்தப்படியாக பாண்டிச்சேரியில் 48 செ.மீ பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழையினால் அதிக சேதம் ஏற்பட்டது.

வெள்ளப்பாதிப்பைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பகுதியில் அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு தரப்பில், அதி கனமழை காரணமாக கடும் மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

Advertisement

Also Read :
உயர் கல்வியில் இனி 2 முறை மாணவர் சேர்க்கை – UGC வெளியிட்ட அறிக்கை

இந்நிலையில் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகளும், மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முகாம் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை ( டிசம்பர் 5ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version