இலங்கை

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள்… 5 இளைஞர்கள் வைத்தியசாலையில்!

Published

on

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள்… 5 இளைஞர்கள் வைத்தியசாலையில்!

மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் 5 இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் (05) இரவு கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – பாசிக்குடா பிரதான வீதியில்  இடம்பெற்றுள்ளது.

Advertisement

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூன்று மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் அதிவேகமாக பயணித்த போது வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், ஒரு எருமை உயிரிழந்துள்ளதுடன், 4 எருமைகள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 5 இளைஞர்களும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 5 இளைஞர்ளும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version